துபாயில் நடைபெறும் காப்28 காலநிலை மாநாட்டில் வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது பற்றிய தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 1.5 டிகிரி உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததா? அறிவியல் மற்றும் அரசியல்ரீதியாக மனிதகுலத்தின் குறிக்கோளாகக் கருதப்படும் இந்த இலட்சியம் எட்டப்படவில்லையென்றால் என்ன நடக்கும்? அது 2015 பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் கனவு.
1.5 என்னும் எல்லைக்கோடு
இந்த எல்லைக்குள் வெப்ப உயர்வு கட்டுப் படுத்தப்படாவிட்டால் கற்பனைக்கு எட்டாத சூழ்நிலை ஏற்படும் என்று ஐநாவின் ஐபிசிசி ஆய்வுக்குழு எச்சரித்தது. இதன்படி 2030க்குள் கார்பன் உமிழ்வு 50 விழுக்காடாகக் குறைக்கப் படவேண்டும். எட்டு ஆண்டுகள் கடந்தபிறகும் இது இன்னும் மணல் மேல் எழுதப்பட்ட எழுத்தாகவே உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதில், கொள்ளை லாபத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகின்றன.
செயல்வடிவம் பெறாமல்
எல் நினோ நிகழ்வால் உந்தப்பட்ட உலக வெப்ப நிலை 2023-இல் சாதனையளவாக உயர்ந்துள்ளது. இது மனித உயிரிழப்புகளுக்கும், சூழல் மண்ட லங்களின் அழிவிற்கும் காரணமாகிறது. உணவு உற்பத்தி, விநியோகத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்து கிறது. தொழிற்புரட்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது வெப்ப நிலை 1.4 டிகிரியை அடைந்துள் ளது. விரைவிலேயே இது 1.5 என்ற வெப்ப உயர்வை அடையும். பூமியில் எந்த நாடும் 1.5 என்ற கனவைக் கொன்ற பழியை ஏற்க விரும்பவில்லை. ஆனால் அவை ஒவ்வொன்றும் தங்களால் இயன்ற அளவிற்கு வெப்ப உயர்வை ஏற்படுத்துகின்றன.
வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் 1.5
1.5 டிகிரி என்ற குறிக்கோளை அடைய பல ஆய்வா ளர்கள் தீவிரமாகப் போராடுகின்றனர். ஒவ்வொரு டிகிரி உயர்வும் மனிதன் உட்பட பூமியில் அனைத்து உயிரினங்களின் வாழ்வையும் சாவையும் நிர்ண யிக்கிறது. ஒவ்வொரு டிகிரி வெப்ப உயர்விற்கும் புயல்கள், வெள்ளப்பெருக்குகள் அதிகமாகின்றன. மனிதக்குறுக்கீடுகள் இல்லாமல் 1.5 டிகிரி வெப்ப உயர்வு பத்தாண்டில் 4.1 மடங்கு காலத்திற்குப் பிறகே நிகழ்கிறது. அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஏழை நாடுகளே காலநிலை மாற்றத்தின் சீர்கேடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
உணவுப் பற்றாக்குறையும் நீர்த்தட்டுப்பாடும்
1.5 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை உயர்ந்தால் 70 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். 50 விழுக்காடு மக்கள் கடும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். இது உணவு பாதுகாப்பின்மையை ஏற் படுத்தும். பெருமளவிலான மக்கள் இடம்பெயர நேரிடும். மீள நேரமில்லாதவகையில் பேரிடர்கள் ஏற்படுகின்றன என்று நாசா ஆப்பிரிக்க அறுவடை திட்டத்தின் தலைவர் கேத்தரின் நக்கலேம்பி (Catherine Nakalembe) கூறுகிறார்.
இரண்டு டிகிரி வெப்ப உயர்வில் உலகம்
ஒவ்வொரு டிகிரி வெப்ப உயர்வும் பேரிடரின் தீவிரத்தன்மையில் பெரும் வேறுபாட்டை ஏற்படுத்து கிறது. சுவாசிக்கக் கிடைக்கும் தூய காற்றில் அரை டிகிரி குறையும்போது மனிதன் வாழாத பகுதிகளில் உள்ள உயிரினங்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். மகரந்தசேர்க்கை, நீரின் தரம், உயிரியல் வளங்கள் போன்ற புவியின் வாழ்வாதார அம்சங்கள் பாதிக் கப்படும். 2 டிகிரி வெப்பநிலை உயர்வில் 18 விழுக்காடு பூச்சியினங்கள், 16 விழுக்காடு தாவரங்கள், 8 விழுக்காடு முதுகெலும்புள்ளவை தங்கள் வாழி டத்தில் பாதியை இழந்துவிடும்.
புல்வெளிப் பகுதிகளாகும் மழைக்காடுகள்
அமேசான் மழைக்காடுகள் ஒரு மாத காலம் நீண்டுநிற்கும் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளும். மரங்கள் அழிந்து வெறும் புற்கள் நிறைந்த சவானா பிரதேசமாக அப்பகுதி மாறும். இதனால் பூமியின் மிகப்பெரிய கார்பன் உறிஞ்சும் தொட்டியாக இருக்கும் அமேசான் மலடாகும். வெப்ப உயர்வால் அமேசான் நதிகள் இதுவரை இல்லாத அளவிற்கு காய்ந்து போய்விட்டன. இதனால் டால்பின்களும் மீன்களும் கூட்டமாக மரணமடைகின்றன. 1.5 டிகிரி என்பது அரசியல் இலக்கு அல்ல. மனிதகுலம் இது வரை சந்தித்த மிகப்பெரிய சவால் என்று அமேசான் சூழலியலாளர் கார்லோஸ் நோப்ரே (Carlos Nobre) கூறுகிறார்.
கடலில் மூழ்கும் தீவு நாடுகள்
சூடாகும் பூமி கடல்களை பாதிக்கிறது. அமிலமய மாதல், ஆக்சிஜன் குறைவு பில்லியனுக்கும் மேற்பட்ட உலக மக்களின் மீன் வள வாழ்வாதா ரத்தை அழிக்கிறது. வெப்ப உயர்வு, கடல் நீரின் பி ஹெச் (pH) மதிப்பில் ஏற்படும் மாற்றத்தால் பவளப்பாறைகள் நிறமிழக்கின்றன. கரீபியன் மற்றும் இந்தியப்பெருங்கடலின் மேற்குப்பகுதிகளில் இருக்கும் பவளப்பாறைகள் காப்பாற்ற முடியாத நிலையை அடைந்துவிட்டன. கூட்டமாக வாழ்ந்த பவளப்பாறை உயிரினங்கள் தனித்தனித் திட்டுக ளாக மாறிவிட்டன.
சூடாகும் பூமி கடல்களை பாதிக்கிறது. அமிலமய மாதல், ஆக்சிஜன் குறைவு பில்லியனுக்கும் மேற்பட்ட உலக மக்களின் மீன் வள வாழ்வாதா ரத்தை அழிக்கிறது. வெப்ப உயர்வு, கடல் நீரின் பி ஹெச் (pH) மதிப்பில் ஏற்படும் மாற்றத்தால் பவளப்பாறைகள் நிறமிழக்கின்றன. கரீபியன் மற்றும் இந்தியப்பெருங்கடலின் மேற்குப்பகுதிகளில் இருக்கும் பவளப்பாறைகள் காப்பாற்ற முடியாத நிலையை அடைந்துவிட்டன. கூட்டமாக வாழ்ந்த பவளப்பாறை உயிரினங்கள் தனித்தனித் திட்டுக ளாக மாறிவிட்டன.
கடலில் மூழ்கும் தீவு நாடுகள்
இனப்பெருக்கம் செய்யும் திறனை இழந்து விட்டன. பலவீனமான உயிரினங்களின் மரபணுக்கள் இதனால் முற்றிலும் இல்லாமல் அழியும் என்று கென்யா கடல்சார் ஆய்வாளர் டேவிட் அபுரா (David Obura) கூறுகிறார். வெப்ப உயர்வில் ஒவ்வொரு டிகிரியும் கடல்நீர்மட்ட உயர்வால் மூழ்கிக் கொண்டிருக்கும் சிறு தீவு நாடுகளில் 10 செண்டி மீட்டர் நீர்மட்ட உயர்வை ஏற்படுத்துகிறது. இது 10 மில்லியன் மக்கள் வெள்ளப்பெருக்கு, புயல்களால் பாதிப்பிற்கு வழிவகுக்கும்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பாத பனிப்பாறைகள்
அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவதால் பூமியில் மனித வாழ்வு கேள்விக்குறியாகிவருகிறது என்று சிறிய தீவுநாடுகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பாலே லேய் லூடேரூ (Dr Pa’olelei Luteru) கூறுகிறார். கடல் நீர்மட்ட உயர்வால் தீவு நாடுகளில் இருக்கும் மக்கள் அடிக்கடி ஏற்படும் புயல்கள், குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாய நில இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொழிற்புரட்சிக்கு முன்பி ருந்ததை விட 4 டிகிரி அளவிற்கு சூடாகிவரும் ஆர்க்டிக் கடற்பரப்பு உறைபனி உருகுதல், மீத்தேன் உமிழ்வு போன்றவற்றால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கணிக்கமுடியாத அளவிற்கு மோசமான காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பனி உருகு வதால் சூரிய ஒளி வாயு மண்டலத்திற்கு பிரதிப லித்துத் திருப்பி அனுப்பப்படாததால் வெப்பநிலை உயர்கிறது. செய்வதற்கு ஏராளமாக இருக்கிறது என்றாலும் இதற்கு குறைவான காலமே உள்ளது என்று யுகே அரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் டேவிட் கிங் கூறுகிறார்.
ஆண்டுக்கு 30 பில்லியன் பசுங்குடில் வாயு உமிழ்வு
ஒவ்வொரு டிகிரி உயர்வாலும் சமூகத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை மக்கள், ஆதிவாசி சமூகங்கள் வாழ்விழக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது என்று செனகல் வானிலை ஆய்வுமைய ஆய்வாளர் அயிடா டியாங் நியாங் (Aida Diongue-Niang) கூறுகிறார். புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 30 பில்லியன் டன் பசு மைக்குடில் வாயுக்கள் உமிழப்படுகின்றன.
காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் சீரழிவு களும் நாளையோ நாளை மறுநாளோ அல்லது இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகோ ஏற்படப் போவதில்லை. இது இன்றே இப்போதே நம் கண் முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு முக்கி யக் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்க ளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தவேண்டும். இதன் மூலம் மட்டுமே பூமி சூடாவதை தடுக்கமுடி யும் என்று காப் 28 மாநாட்டில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.